78வது பெருமைமிக்க தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டுக்கு கௌரவம் செலுத்தும் வகையில் இலங்கை கடற்படையினரால் இன்று (04) 25 மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டுள்ளன.
கடற்படைத் தளபதியின் ஆலோசனையின் பேரில், கொழும்பு காலி முகத்திடலுக்கு அருகில் கடற்பரப்பில் நிலைநிறுத்தப்பட்டிருந்த ‘இலங்கை கடற்படைக் கப்பல் சயுர’ போர்க்கப்பலில் இருந்து இந்த மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன.
நாட்டின் மிக உயரிய மரியாதையாகக் கருதப்படும் 25 வேட்டுக்கள் தீர்க்கும் இந்த கௌரவம், தேசத்திற்காக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave feedback about this