Local News

துயரத்தில் ஆந்திரா: லொறி–பேருந்து மோதல், 14 பேர் உடல் கருகி பலி

ஆந்திராவின் மர்க்காபுரம் பகுதியில் தனியார் பேருந்தும் லொறியும் நேருக்கு மோதி விபத்துக்குள்ளாகின.

மோதிய வேகத்தில் பேருந்து தீ பிடித்து எரிந்தது. அதிகாலை நேரம் என்பதால் பல பயணிகள் தூக்கத்தில் இருந்தனர். இதனால் அவர்களால் உடனடியாக வெளியே வர முடியவில்லை .

விபத்து பற்றி தகவல் அறிந்தவுடன் தீயணைப்பு வீரர்கள், பொலிஸார் விரைந்து வந்து தீயை அணைத்து மீட்பு பணியை மேற்கொண்டனர். இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக 14 பேர் உடல் கருகி பலியாகி உள்ளனர். 25-க்கும் அதிகமானவர்கள் காயங்களுடன் தப்பி உள்ளனர்.

காயமடைந்தவர்களுக்கு வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இதனால் உயிர் பலி அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்தில் பேருந்து முழுவதுமாக தீப்பிடித்து எரிந்தது.

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service

PROS

+
Add Field

CONS

+
Add Field
Choose Image
Choose Video