Local News Trending

நள்ளிரவு முதல் தொடர் வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் அஞ்சல் திணைக்களம்

www.radioraaga.lk

அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று (28) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தைத் திட்டமிட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் நிரோஷன தெரிவித்துள்ளார்.

ஆட்சேர்ப்பு நடைமுறையில் ஏற்படும் தாமதங்களை நிவர்த்தி செய்வது உள்ளிட்ட 10 கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தம் நடத்தப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

 அண்மையில் தொடருந்து திணைக்கள ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நிலையில் பேச்சுவார்த்தை மூலம் அந்த வேலை நிறுத்தம் நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *