பதுளை, கல உட பிரதேசத்தில் ஒரே இலக்க தகடகள் கொண்ட இரண்டு முச்சக்கர வண்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இரண்டு முச்சக்கர வண்டிகளின் செசி இலக்கம் மற்றும் இயந்திர எண்கள் ஒரே இலக்கங்கள் என பதுளை போலீசார் தெரிவித்தனர்.
எனவே போலியானது எது என கண்டுபிடிப்பதற்காக முச்சக்கர வண்டிகளை அரச பகுப்பாய்வாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
முதல்கட்ட விசாரணைகளில் இரண்டு முச்சக்கர வண்டிகளும் கடந்த காலங்களில் பல நபர்களுக்கு சொந்தமாக இருந்தமை தெரிய வந்துள்ளது.