Local News

இலங்கையில் வீட்டில் இருந்து வேலை செய்யும் சாத்தியப்பாடு தொடர்பில் அரசு வெளியிட்டுள்ள தகவல்

சமகால நெருக்கடியை எதிர்கொண்டு உலகின் பல நாடுகள் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை நாடியுள்ளன.இந்நிலையில் அதனை இலங்கையில் செயல்படுத்த வேண்டிய அவசியமில்லை என வர்த்தக, வணிக மற்றும் கூட்டுறவு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் இதுபோன்ற நடவடிக்கைகள் தேவைப்பட்டால், அது குறித்து கவனம் செலுத்தப்படும் என அவர் கூறியுள்ளார். எரிசக்தியைப் பாதுகாத்து மக்கள் முன்னேறக்கூடிய சூழலை உருவாக்க அரசாங்கம் பாடுபடும் என அவர் கூறினார்.

சப்புகஸ்கந்த மற்றும் முதுராஜவெலவில் எரிவாயு கிடங்கு ஒன்றை நிர்மாணிக்கவும் எண்ணெய் தொட்டிகளை நிர்மாணிக்கவும், திருகோணமலையில் பத்து எண்ணெய் தொட்டிகளை நவீனமயமாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போதைய நெருக்கடி சூழ்நிலை காரணமாக, உலக சந்தையில் விலை உயர்வு காரணமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையில் நுகர்வோர் அதிகரிப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி உட்பட முரண்பட்ட நாடுகளின் தலைவர்கள் எடுக்கும் முடிவுகளுக்கு ஏற்ப எரிபொருள் விலைகள் மாறும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service

PROS

+
Add Field

CONS

+
Add Field
Choose Image
Choose Video