Local News

உப்பு தொடர்பிலும் நாடாளுமன்றத்தில் காரசாரமான விவாதமா!!!

நாட்டின் உப்பு பற்றாக்குறைக்கு தீர்வாக அரசாங்கத்தால் இறக்குமதி செய்யப்பட்ட உப்பு முதல் தொகுதி, ஒன்றரை நாட்கள் தாமதத்திற்குப் பிறகு நாளை பிற்பகலுக்குள் நாட்டிற்கு வந்து சேரும் என்று தேசிய உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதில் 3050 மெட்ரிக் டன் உப்பு கையிருப்பும் உள்ளடங்குவதாக தேசிய உப்பு நிறுவனத்தின் தலைவர் கயான் வெல்லல தெரிவித்தார்.

இந்த உப்பு நேற்றுக்குள் நாட்டை வந்தடையும் என்று கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெதி முன்னர் தெரிவித்திருந்தார்.

இருப்பினும், இந்தியாவின் தமிழ்நாடு பகுதியைப் பாதிக்கும் பாதகமான வானிலை உப்பு கப்பல்கள் வருவதில் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளதாக தேசிய உப்பு நிறுவனத்தின் தலைவர் கயான் வெல்லாலா மேலும் தெரிவித்தார்.

இதற்கிடையில், உப்பு இருப்பு வந்த ஒரு வாரத்திற்குப் பிறகு, உப்பு விலை சுமார் 50 சதவீதம் குறைக்கப்படும் என்றும், வார இறுதிக்குள் நாட்டில் போதுமான உப்பு இருப்பு இருக்கும் என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில், உப்பு பற்றாக்குறை தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் காரசாரமான விவாதம் வெடித்தது.

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service

PROS

+
Add Field

CONS

+
Add Field
Choose Image
Choose Video