Local News

நாட்டில் எரிபொருள் இல்லை என வதந்தி பரப்பியவருக்கு வந்த சோதனை

நாட்டில் எரிபொருள் இல்லை என சமூக வலைதளங்கள் ஊடாகப் போலித் தகவல்களைப் பரப்பிய நபர் ஒருவரை மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

நாட்டில் எரிபொருள் இல்லை எனக் கூறி வெளிநாட்டவர்கள் வருகையைத் தடுத்தும், சுற்றுலாத் துறைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் பொதுமக்களைத் தூண்டும் வகையில் போலிப் பிரசாரங்களை முன்னெடுத்தமைக்காகவே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் வத்தேகம பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதுடன், மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவின் கணினி குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service

PROS

+
Add Field

CONS

+
Add Field
Choose Image
Choose Video