ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முதுன்கொடுவ துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மீகொட – ஆட்டிகல வீதியில் உந்துருளியில் சென்று கொண்டிருந்தபோது சிற்றூந்தில் வந்த மர்ம நபர்களால் அவர் சுடப்பட்டார்.
இதனையடுத்து அவர், ஹோமாகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Leave feedback about this