Radio Raaga Local News இலங்கை ஆசிரியர் சங்கம் இன்று முதல் வட மாகாணம் முழுவதும் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளது.
Local News

இலங்கை ஆசிரியர் சங்கம் இன்று முதல் வட மாகாணம் முழுவதும் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளது.

வட மாகாண கல்வித் திணைக்களம் மேற்கொண்டுள்ள ஆசிரியர் இடமாற்ற நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்த போராட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக சங்கத்தின் உபத் தலைவர் தீபன் திலீசன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இவ்விடமாற்ற முடிவுகள் குறித்து இலங்கை ஆசிரியர் சேவை சங்கமும் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், அந்தச் சங்கத்தின் உப செயலாளர் காரளசிங்கம் பிரகாஷ், ஆசிரியர் இடமாற்றங்கள் நீதி மிக்க முறையில் மேற்கொள்ளப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

Exit mobile version