Radio Raaga Local News Politics உள்ளூராட்சி சபை பிரதிநிதிகள் தெரிவு குறித்து ஐ.தே.கட்சியின் தீர்மானம்
Local News Politics

உள்ளூராட்சி சபை பிரதிநிதிகள் தெரிவு குறித்து ஐ.தே.கட்சியின் தீர்மானம்

உள்ளூராட்சி சபைகளுக்கு பிரதிநிதிகளை நியமிக்கும்போது, ​​அவர்கள் பெற்ற வாக்குகளின் சதவீதத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.

அதன்படி, அதிக வாக்குகளைப் பெறும் வேட்பாளர்கள் மட்டுமே ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சி சபைகளுக்கு நியமிக்கத் தகுதியுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி சபைகளுக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் முடிவை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மாற்றக்கூடாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.

Exit mobile version