ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, கட்டார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானி (Sheikh Tamim bin Hamad Al-Thani) உடன் தொலைபேசி ஊடாக கலந்துரையாடியதுடன், தற்போதைய பிரச்சினைகள் குறித்து ஆலோசித்து கட்டாருடனான தனது ஒற்றுமையை வெளிப்படுத்தினார்.
இதன்போது, கட்டாரில் உள்ள இலங்கையர்களின் நலன் குறித்து அமீர் உறுதியளித்ததுடன், தற்போதைய சவால்களுக்கு மத்தியிலும் நிலையான எரிபொருள் விநியோகத்தைப் பேணுவதில் கட்டார் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் வலியுறுத்தினார் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
