உலகின் புகழ் பெற்ற மைதானங்களில், லண்டனில் உள்ள லோர்ட்ஸ் மைதானம் மிகவும் பாரம்பரியம் மிக்கதாக திகழ்கிறது.
இந்த மைதானத்தில், உலகளாவிய ரீதியில் சாதனைப்படைக்கும் வீரர்களின் பெயர்கள், பெயர் பலகைகளில் பொறிக்கப்படுவது வழக்கம்.
மேலும், இந்த மைதனாத்திற்கு சொந்தமான நூதனசாலையில் கிரிக்கெட்டில் சாதனைப் படைத்தவர்களின் புகைப்படங்கள் இடம் பெற்றிருக்கும் .
இந்த வகையில், இந்திய கிரிக்கட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் புகைப்படம் நூதனசாலையில் இன்று திறந்து வைக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த புகைப்படத்திற்கு முன் நின்று சச்சின் டெண்டுல்கர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.
