Radio Raaga Sports தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு வழங்க மறுப்பு!
Sports

தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு வழங்க மறுப்பு!

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அவரது இடத்தில் சிரேஷ்ட வீரரான கருண் நாயரை சேர்க்க, அணியின் பயிற்றுவிப்பாளரான கம்பீர் தீர்மானித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமாக உள்ளது. இதற்காக இந்திய அணி மற்றும் இங்கிலாந்து அணியின் வீரர்கள் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில், சாய் சுதர்சன் உச்சக்கட்டத் திறனைக்கொண்டிருக்கிறார். அத்துடன் அவருக்கு ஏற்கனவே இங்கிலாந்து மண்ணில் விளையாடிய அனுபவம் இருக்கிறது என்ற அடிப்படையில், அவர் முதல் டெஸ்ட் அணியில் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இறுதி நேரத்தில் கருண் நாயருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version