Radio Raaga Local News தொல்பொருள் மதிப்புள்ள இடங்களை இலவசமாகப் பார்வையிட வாய்ப்பு
Local News

தொல்பொருள் மதிப்புள்ள இடங்களை இலவசமாகப் பார்வையிட வாய்ப்பு

18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கலாசார நிதியத்திற்குச் சொந்தமான திட்டங்களை இலவசமாகப் பார்க்கும் வாய்ப்பை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

மத்திய கலாசார நிதியத்தின் ஆளுநர் குழு தொடர்புடைய முன்மொழிவை அங்கீகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூர் சிறுவர்களிடையே கலாசார பாரம்பரியத்தின் மீதான மதிப்பை ஏற்படுத்துவதும், தேசிய பாரம்பரியம் மற்றும் இடங்கள் குறித்த விழிப்புணர்வை வளர்ப்பதும் இதன் முதன்மை நோக்கமாகும். இதன்படி, சீகிரியா, யாபஹூவ, தம்புள்ளை உள்ளிட்ட மத்திய கலாசார நிதியத்திற்குச் சொந்தமான 26 தொல்பொருள் மதிப்புள்ள இடங்களை, நுழைவுச் சீட்டுகள் இல்லாமல் பார்வையிட சிறுவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

இதற்கு இணையாக, வெளிநாட்டு சிறுவர்களுக்கு வரையறுக்கப்பட்ட நிபந்தனைகளின் கீழ் சம்பந்தப்பட்ட இடங்களுக்குள் நுழைவதற்கான அனுமதிகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க தெரிவித்தார்.

Exit mobile version