பதுளை – துங்ஹிந்த பகுதியில் சுற்றுலா பேருந்தொன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் இரண்டு பெண்களும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விபத்தில் காயமடைந்த 26 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
