Radio Raaga Local News Crime and Threats முன்னாள் ஐஜிபி தேசபந்து தென்னகோன் கைது!
Crime and Threats Local News

முன்னாள் ஐஜிபி தேசபந்து தென்னகோன் கைது!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி முகத்திடல் போராட்டத்தின் மீதான தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய இந்தக் கைது இடம்பெற்றுள்ளது. தம்மை கைது செய்வதைத் தடுத்து, முன் பிணையில் விடுவிக்குமாறு கோரி அவர் பிணை மனு விண்ணப்பத்தை தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் இன்று (20) கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் அந்த பிணை மனு அழைக்கப்பட்டிருந்த நிலையில், அது நிராகரிக்கப்பட்டது.

Exit mobile version