முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டபோது, ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தனது பேஸ்புக் கணக்கில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.
அந்தபதிவில் கி.மு 49 இல் கவுலின் ஆளுநரான ஜூலியஸ் சீசர் ரூபிகான் நதியைக் கடந்தது பற்றி எழுதப்பட்டிருந்தது.
ரூபிகான் நதி என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இத்தாலிய ஆறு, இது கி.மு 49 இல் ஜூலியஸ் சீசர் தனது படைகளுடன் கடந்து, ரோமானிய குடியரசின் உள்நாட்டுப் போரைத் தூண்டியதால் புகழ்பெற்றது.
கி.மு 49 இல், ரோமானிய ஜெனரல் ஜூலியஸ் சீசர், ரூபிகான் நதியைக் கடப்பது ரோமானிய செனட்டின் விதிமுறைகளுக்கு எதிரானது என்று தெரிந்தும், தனது படைகளுடன் அந்த நதியைக் கடந்தார்.
ஜனாதிபதி சட்டத்தரணி தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டது போல ” ரூபிகானைக் கடப்பது ” என்பது வேண்டுமென்றே திரும்பப் பெற முடியாத ஒரு புள்ளியைக் கடந்து செல்வதற்கான ஒரு உருவகம். இந்த சொற்றொடர் கி.மு 49 இல் ரோமானியக் குடியரசில் ஜூலியஸ் சீசர் அதிகாரத்தைக் கைப்பற்றியதிலிருந்து உருவாகிறது.
ரோமானிய தளபதிகள் தங்கள் படைகளை இத்தாலியில் உள்ள குடியரசின் சொந்தப் பகுதிக்குள் கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், ஜனவரி 10 ஆம் திகதி, ஜூலியஸ் சீசர் தனது இராணுவத்தை ரூபிகான் ஆற்றின் குறுக்கே வழிநடத்தி , சிசல்பைன் கவுல் மாகாணத்திலிருந்து இத்தாலிக்குள் சென்றார்.
ஒரு வேளை அவர் ரூபிகான் கடப்பதில் தோல்வியடைந்திருந்தால் அவர் தூக்கிலிடப்படுவார் என ரூபிகானின் வரலாறு கூறுகிறது.
இந்த சம்பவம் ரூபிகானைக் கடப்பது அல்லது திரும்பப் பெற முடியாத புள்ளியைக் கடப்பது என்ற சொற்றொடருக்கு வழிவகுத்தது.
மேலும் அவர் குறிப்பிட்ட பதிவில், அரசியலிலோ அல்லது நிர்வாகத்திலோ சில தருணங்கள் உள்ளன, அவை ரூபிகானைக் கடக்கும் தருணங்கள் அல்லது திரும்பப் பெற முடியாத புள்ளியாகும்.
அந்த முடிவுகள், நாட்டின் நீண்டகால நலன்களைக் கருத்தில் கொண்டு, புத்திசாலித்தனமாகவும், மனதில் கொண்டும் எடுக்கப்பட்ட முடிவுகளாகக் கருதப்பட வேண்டும், எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்தபதிவு தற்போது மக்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டபோதே இந்த பதிவை அவர் வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் ரணில் விக்ரமசிங்கவின் கைதை தொடர்பு படுத்தி அவர் இந்த பதிவு வெளியிடப்பட்டிருப்பதாக பலராலும் பரவலாக பேசப்படுவதை எம்மால் காணகூடியதாக இருந்தது.
