Radio Raaga Local News Politics லஞ்ச ஊழல் வழக்கில் கைதாகும் முன்னரே , மஹிந்தானந்த அளுத்கமகே முன்ஜாமீன் மனு தாக்கல்!
Local News Politics

லஞ்ச ஊழல் வழக்கில் கைதாகும் முன்னரே , மஹிந்தானந்த அளுத்கமகே முன்ஜாமீன் மனு தாக்கல்!

கடந்த அரசாங்கத்தின் போது தரமற்ற கரிம உரக் கப்பலை நாட்டிற்கு இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்படுவதற்கு முன்னர் முன்பிணையில் விடுவிக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, இன்று (14) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

அதன்படி, இந்த கோரிக்கை தொடர்பாக எதிர்வரும் 19 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைக்குமாறு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி, அழைப்பாணை விடுத்துள்ளார்

Exit mobile version