159ஆவது காவல்துறை தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு காவல்துறை தினம் “சட்டத்தை நிலைநிறுத்துவோம் சமாதானத்தைப் பேணுவோம்” என்ற கருப்பொருளில் கொண்டாடப்படுகிறது.
இலங்கையின் காவல்துறை செப்டம்பர் 3, 1866 நிறுவப்பட்டது.
159ஆவது காவல்துறை தினத்தையொட்டி திம்பிரிகஸ்யாய காவல்துறை மைதானத்தில் இன்று பிற்பகல் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் விசேட நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
