Radio Raaga Education A/L பரீட்சைகள் மூன்று நாட்களுக்கு இடைநிறுத்தம் – மாற்று தேதிகள் அறிவிப்பு
Education Local News

A/L பரீட்சைகள் மூன்று நாட்களுக்கு இடைநிறுத்தம் – மாற்று தேதிகள் அறிவிப்பு

இன்று (27), நாளை (28) மற்றும் சனிக்கிழமை (29) நடைபெறவிருந்த 2025 உயர் தர (A/L) பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் பொது ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியானகே அறிவித்துள்ளார்.

இதற்கமைய, மேற்கண்ட மூன்று நாட்களுக்கு மாற்றாக பரீட்சைகள் டிசம்பர் 07, 08 மற்றும் 09ஆம் திகதிகளில் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் மோசமான வானிலை தாக்கத்தால் ஏற்பட்ட அனர்த்த நிலைமையை முன்னிட்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் பொது மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version