கடந்த 2008ஆம் ஆண்டு பொரலஸ்கமுவவில் இடம் பெற்ற தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கின் சாட்சியான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சாட்சியம் இன்று கொழும்பு உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது.
அக்டோபர் மாதம் 10ஆம் திகதி 2008 ஆம் ஆண்டு விவசாய அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை கொல்லும் நோக்கில் தற்கொலை குண்டு தாக்குதலுக்கு உதவியாக இரண்டு பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று கொழும்பு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
முன்னர் வழங்கப்பட்ட அறிவிப்பின்படி பிரதான சாட்சியான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்றத்தில் ஆஜரானார். வழக்கின் முதன்மை சாட்சியான சிறிசேனவின் சாட்சியை பதிவு செய்துவிட்டு அவரை விடுவிக்க உத்தரவிடப்பட்டது.