ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னணியில் புலனாய்வுத் துறையினர் – ரொஹான் சில்வா

ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னணியில் புலனாய்வுத் துறையினர் – ரொஹான் சில்வா

ஏப்ரல் 21 தாக்குதல்களின் பின்னணியில் நாட்டின் புலனாய்வுத் துறையினால் இருப்பது தெரியவந்துள்ளதாக சமூக மற்றும் சமாதான நிலையத்தின் பணிப்பாளர் ரோஹான் சில்வா தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். நாட்டின் புலனாய்வுத் துறையினர் ஏப்ரல் 21 தாக்குதல்களின் பின்னணியில் இருக்கின்றார்கள், தாக்குதல்களை மேற்கொண்டவர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணினார்கள் என்பது விசாரணை அறிக்கைகள் ஊடாக எனக்குத் தெரியவந்துள்ளது. தாக்குதலின் பின்னணியிலிருந்த பிரதான சூத்திரதாரி யார் என்பதை பிரதான அடையாளம் காண முடியாதளவில் நாட்டின் பாதுகாப்பு துறை காணப்படுவதாக சமூக மட்டும் சமாதான நிலையத்தின் பணிப்பாளர் ரொஹான் சில்வா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *