நாகை – காங்கேசன்துறை கப்பலில் பயணிப்போருக்கான அரிய வாய்ப்பு!!!

ராமர் பாலத்தில் 1 கி.மீ., துாரம் நடந்து சென்று தரிசிக்கும் வகையில், ஆன்மிக, கலாசார சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நாகையிலிருந்து இலங்கைக்கு கப்பல் இயக்கும், ‘சுபம்’ என்ற தனியார் கப்பல் நிறுவன இயக்குநர் சுந்தரராஜன் கூறியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது: நாகையில் இருந்து காங்கேசன்துறை துறைமுகம் வரை, பெப்ரவரி 22 முதல் செவ்வாய்கிழமை தவிர்த்து, வாரம் ஆறு நாட்கள் பயணியர் கப்பல் இயக்கப்படுகிறது. பெப்ரவரி முதல் சுற்றுலா பயணியர் அதிகம் வருகின்றனர்….

Read More

ஜனாதிபதி இன்று வியட்நாம் பயணம்

வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் (Luong Cuong) அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, மே 04 ஆம் திகதி முதல் 06 ஆம் திகதி வரை வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொள்ள உள்ளார். அதற்காக, ஜனாதிபதி இன்றிரவு (03) நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளார்.வியட்நாம் மற்றும் இலங்கைக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளின் 55 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இடம்பெறும் ஜனாதிபதியின் இந்த வியட்நாம் அரச விஜயம், இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவுகளை…

Read More

டேன் பிரியசாத் கொலை வழக்கில், துப்பாக்கிதாரி கைது!!!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) உள்ளூராட்சி தேர்தல் வேட்பாளரும், “நவ சிங்களே தேசிய இயக்கத்தின்” ஒருங்கிணைப்பாளருமான டேன் பிரியசத் கொலை வழக்கில் துப்பாக்கிதாரியான முக்கிய சந்தேக நபர் கொழும்பு கருவாத் தோட்டம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தக் கொலை கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி வெல்லம்பிட்டியவில் உள்ள லக்ஸந்த செவன குடியிருப்பு வளாகத்தில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

வாகன இறக்குமதி மீதான பல கட்டுப்பாடுகள் நீக்கம்

டவாகன இறக்குமதி மீதான பல கடுப்பாடுகளை நீக்கி நிதி அமைச்சு புதிய வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் என்ற முறையில், இந்த வர்த்தமானி அறிவிப்பை ஏப்ரல் 29 முதல் அமுலுக்கு வரும் வகையில், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனூடாக, இறக்குமதி செய்யப்பட்டும் பல்வேறு காரணங்களால் விடுவிக்க முடியாமல் துறைமுகத்தில் காணப்படும் பல வகையான கார்களை விடுவிக்க முடியுமென தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் விளக்கமளித்த இலங்கை வாகன…

Read More

இம்மாதம் 5, 6 ஆம் திகதிகளில் வாகன வருமான வரிப் பத்திரம் வழங்கும் கருமபீடங்கள் இயங்காது.

கிழக்கு மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் வழங்கப்பட்டு வருகிற வாகன வருமான வரிப் பத்திரம் வழங்கும் கருமபீட சேவை செயற்பாடுகள் இம்மாதம் 5 ஆம் மற்றும் 6 ஆம் திகதிகளில் இடம்பெறமாட்டாதென்று கிழக்கு மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள மாகாண ஆணையாளர் திருமதி த.வருணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலையொட்டி குறித்த இரு தினங்களில்,கிழக்கு மாகாண தலைமைக் கருமபீடம் உட்பட மாகாணத்திலுள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் இயங்கி வருகின்ற கருமபீடங்கள் யாவும்…

Read More

சர்வதேச தொழிலாளர் தினம் இன்று

இன்று சர்வதேச தொழிலாளர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மே 1 அன்று, தொழிலாளர் தினத்தை நாம் கொண்டாடுகிறோம், இது மே தினம் அல்லது சர்வதேச தொழிலாளர் தினம் என்றும் அழைக்கப்படுகிறது. தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர் இயக்கத்தின் பங்களிப்புகள் இந்த நாளில் நினைவு கூரப்படுகிறது. 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொழிற்சங்கங்களும், சோசலிசக் குழுக்களும் தொழிலாள வர்க்க மக்களுக்கு ஆதரவான நாளாக மே 1-ஐ அறிவித்தது. 1886-ஆம் ஆண்டில் மே முதல் நாள் அமெரிக்காவின் பிற…

Read More

எரிபொருள் விலை குறைப்பு!!!

இன்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 299 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 293 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், 361 ரூபாவாக இருந்த ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20…

Read More

ஐ போன்களில் இடைநிறுத்தப்படவுள்ள வாட்ஸ்அப்!!!

எதிர்வரும் மே மாதம் முதல் பல ஐபோன் மொடல்களுக்கு வாட்ஸ்அப் சமூக ஊடக செயலி இனி இயங்க மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஐபோன் 5s, ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ் போன்ற ஐபோன் மொடல்கள் உள்ளிட்ட பழைய ஐபோன்களுக்கு வாட்ஸ்அப் சமூக ஊடக வலையமைப்பு இனி இயங்க மாட்டாது. இந்நிலையில், iOS 15.1இற்கு முன்பு இருந்த மொபைல் போன் மொடலை புதிய இயக்க முறைமைக்கு புதுப்பிக்க முடியாவிட்டால், வாட்ஸ்அப்பைப் பயன்படுத்த முடியாது என்றும்…

Read More

பெலியத்த விபத்தில் 30 பேர் காயம்.

தென்னிலங்கையில், பெலியத்த பொலிஸ் பிரிவின் ஹெட்டியாராச்சி வளைவில் தனியார் பேருந்தும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சுமார் 30 பேர் காயமடைந்து பெலியத்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த விபத்து இன்று (29) காலை நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Read More

இன்றுடன் நிறைவு பெறும் தபால் வாக்குப் பதிவு.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்றுடன் (29) நிறைவடைவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதுவரை தபால் மூலம் வாக்களிக்க முடியாத அரச ஊழியர்கள் இன்று தங்கள் பணியிடங்களில் தபால் மூலம் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

Read More

Featured posts